where is my way

where is my way
looking for the neverending life

Friday, January 8, 2010

மலை வீழ் அருவி

மலை வீழ் அருவி


மலைவீழ் அருவி ஓட
மரம் மேல் குருவி ஆட
விண்மேல் மேகம் ஓட
கண்மேல் கயல் ஆட
கன்னி கையில் வளையாட
கால்களிலே சிலம்பாட
மன்னன் மனமோ மருவியாட
நின்றான்;களைந்தான் கனவென.

---------------------------------------------------------------------------------------------------------------


சிரிப்பப்பா!
------------------

சோலை சிரித்தால் மலர்கள்,
காலை சிரித்தால் கதிர்கள்,
அப்பப்பா வண்ண சிரிப்பப்பா!

உதடுமட்டும் சிரித்தால் இறவு
உள்ளங்கள் சிரித்தால் உறவு,
அப்பப்பா எண்ணச் சிரிப்பப்பா!

ஏழை சிரித்தால் தீபாவளி,
கோழை சிரித்தால் தீருமோ வலி?
அப்பப்பா என்ன சிரிப்பப்பா !

கண்கள் சிரித்தால் கருணை,
கவிஞன் சிரித்தால் கவிதை,
அப்பப்பா அது முத்து சிரிப்பப்பா!

மேகம் சிரித்தால் சாரல்,
மங்கை சிரித்தால் வாரல்,
அப்பப்பா இது சிரிப்பாப்பா?

No comments:

Post a Comment