மலை வீழ் அருவி
மலைவீழ் அருவி ஓட
மரம் மேல் குருவி ஆட
விண்மேல் மேகம் ஓட
கண்மேல் கயல் ஆட
கன்னி கையில் வளையாட
கால்களிலே சிலம்பாட
மன்னன் மனமோ மருவியாட
நின்றான்;களைந்தான் கனவென.
---------------------------------------------------------------------------------------------------------------
சிரிப்பப்பா!
------------------
சோலை சிரித்தால் மலர்கள்,
காலை சிரித்தால் கதிர்கள்,
அப்பப்பா வண்ண சிரிப்பப்பா!
உதடுமட்டும் சிரித்தால் இறவு
உள்ளங்கள் சிரித்தால் உறவு,
அப்பப்பா எண்ணச் சிரிப்பப்பா!
ஏழை சிரித்தால் தீபாவளி,
கோழை சிரித்தால் தீருமோ வலி?
அப்பப்பா என்ன சிரிப்பப்பா !
கண்கள் சிரித்தால் கருணை,
கவிஞன் சிரித்தால் கவிதை,
அப்பப்பா அது முத்து சிரிப்பப்பா!
மேகம் சிரித்தால் சாரல்,
மங்கை சிரித்தால் வாரல்,
அப்பப்பா இது சிரிப்பாப்பா?
No comments:
Post a Comment